Screen Reader Access     A-AA+
அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், காங்கேயம், சிவன்மலை - 638701, திருப்பூர் .
Arulmigu Subramaniyswamy Temple, Kangeyam, Sivanmalai - 638701, Tiruppur District [TM010054]
×
-

  மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களால் அறிவிக்கப்பட்டுள்ள அன்னதானத் திட்டம் இத்திருக்கோயிலில் 23.03.2002 முதல் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திருக்கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு தினந்தோறும் 100 நபர்களுக்கு மதியம் 12.30 மணிக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. அன்னதான திட்டத்தில் போக் சான்றிதழ் பெறப்பட்டு சுத்தமான உணவு தயாரிக்கப்பட்டு, சுத்தரிக்கப்பட்ட குடிநீர் அளிக்கப்பட்டு வருகிறது. ஆற்றுவார் ஆற்றல் பசியாற்றல் அப்பசியை மாற்றுவார் ஆற்றலின் பின் - திருவள்ளுவர். தாங்களும், தங்கள் பிறந்த நாள், திருமண நாள், முன்னோர்கள் நினைவு நாள் மற்றும் இல்லங்களில் நடைபெறும் விஷேச நாளன்று ஒரு நாள் அன்னதானம் வழங்க ரூ.3500/- செலுத்தி பங்கு பெறலாம். அன்னதானத் திட்டத்தில் வைப்பு நிதியாக ரூ.75,000/- முதலீடாக செலுத்தும் பட்சத்தில் அத்தொகையினை முதலீடு செய்து அதன் மூலம் கிடைக்கப்பெறும் வட்டியைக் கொண்டு வருடத்தில் பக்தர்கள் விரும்பு ஏதாவது ஒரு நாள் அன்னதானம் வழங்கப்படும்.